×

அண்ணனை கொலை செய்த கும்பலை தீர்த்துக்கட்ட வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய 6 பேர் பட்டாகத்திகளுடன் கைது: 2 கத்திகள் 3 பைக் பறிமுதல்

செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் அண்ணனை கொலை செய்த கும்பலை தீர்த்துக்கட்ட வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.  செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் மல்ரோசாபுரம் பகுதியில் சந்தேகப்படும் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றித்திரிவதாக மறைமலைநகர்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் எஸ்ஐ வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதனிடையே, சிங்கபெருமாள் கோயில் அருகே மல்ரோசாபுரம் பகுதியில், கம்பெனியில் வேலை செய்வதாக கூறி வாடகைக்கு வீடு எடுத்து 6 பேர் கும்பல் கடந்த 10 நாட்களாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சுற்றிவளைத்து 6 பேர் கும்பலை மடக்கி பிடித்தனர்.  காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, செம்மஞ்சேரி சுனாமி குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த சேட்டு என்ற பாலாஜி, அவரது தம்பி ஹரி சங்கர் என்ற கடுகு, காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஷியாம் குமார், சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அபிமன்யு, காரப்பாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ், செங்கல்பட்டு புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது.மேலும் சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த சேட்டு என்ற  பாலாஜியின் அண்ணன் கருப்பு என்ற வடிவழகன் ஒரு வருடத்துக்கு முன்பு சென்னை சேத்துப்பட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த கும்பலை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் சேட்டு என்ற பாலாஜி தனது கூட்டாளிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது.  மேலும் பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடி பழுதுபார்த்து அவற்றை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து  இவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்திகள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.  அண்ணனை கொலை செய்தவர்களை பழிக்குப்பழிவாங்க வாடகைக்கு வீடு எடுத்து 6 பேர் கும்பல் தங்கியிருந்த  சம்பவம்  சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

The post அண்ணனை கொலை செய்த கும்பலை தீர்த்துக்கட்ட வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய 6 பேர் பட்டாகத்திகளுடன் கைது: 2 கத்திகள் 3 பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Singaperumal ,Dinakaran ,
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப...